News January 3, 2026

அதிகரிக்கும் ஒயிட் காலர் பயங்கரவாதம்: ராஜ்நாத் சிங்

image

இந்தியாவில் ‘ஒயிட் காலர்’ பயங்கரவாதம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி, நன்கு படித்தவர்கள் கூட தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். கல்வி கற்பதன் நோக்கம் என்பது தொழில்முறை வெற்றியை பெறுவதற்கு மட்டுமல்ல, ஒழுக்கம் மற்றும் பண்புகளை வளர்த்துக்கொள்வதை சேர்த்துதான் என்று அவர் குறிப்பிட்டார்.

Similar News

News January 14, 2026

2-வது ODI: வெற்றியை நோக்கி நியூசிலாந்து

image

ராஜ்கோட்டில் நடக்கும் 2-வது ODI-ல், நியூசிலாந்து வெற்றி முகத்தில் உள்ளது. 285 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய NZ, முதல் 10 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பிறகு டேரில் மிட்செல், வில் யங் அபாரமாக ஆடி 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதி 10 ஓவர்களில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்கள் உள்ளன. NZ-ன் வெற்றியை தடுக்க இந்தியா என்ன செய்யணும்?

News January 14, 2026

இன்று ₹2,000, ₹5,000 ₹10,000

image

பொங்கல் பண்டிகை எதிரொலியால் தமிழகம் முழுவதும் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. முக்கிய மலர் சந்தைகளில் அதிகபட்சமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ₹5,000, ₹10,000 முதல் ₹12,000 வரை விற்பனையாகிறது. அதேபோல கிலோ பிச்சிப் பூ ₹1,200, முல்லை ₹2,000 வரை விற்பனையாகிறது. கடும் பனிப்பொழிவு, மழையின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட வரத்து குறைவினால் மல்லிகைப்பூ விலை அதிகரித்துள்ளதாக பூ வியாபாரிகள் கூறுகின்றனர்.

News January 14, 2026

கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?

image

கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடத்திற்கு பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். கரும்பில் உள்ள கால்சியம் சத்து, எச்சிலுடன் கலந்து வேதிவினை ஆற்றுகிறது. அந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கும்போது, அதிகமான சூட்டை கிளப்பும் எதிர்வினை நடக்கும். இதனால் நாக்கு வெந்து விடும். இதனை தவிர்க்க கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்த வேண்டும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!