News January 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 569
▶குறள்:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
▶பொருள்: நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்
Similar News
News February 3, 2026
இனி குழந்தைகள் முன் இதை செய்யுங்கள்

ஆளாளுக்கு ஒரு போன் வைத்திருப்பதால், வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே இல்லை. இப்படி செய்தால் உங்கள் குழந்தைகளும் அதையேதான் செய்வர். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு முன் கணவன்- மனைவி இருவரும் அமர்ந்து அன்றைய நாளை பற்றி டிஸ்கஸ் பண்ணுங்க. ஜோக் அடித்து சிரித்து மகிழ்ச்சியாக இருங்க. இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலை நன்றாக இருப்பதோடு, அவர்கள் உங்களுடன் பிணைப்பாகவும் இருப்பர். SHARE.
News February 3, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. வந்தாச்சு அப்டேட்

புதுச்சேரியில் மகளிருக்கான மாதாந்திர உதவித் தொகை, இம்மாதம் முதல் <<19033682>>₹2,500<<>> ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழகத்திலும் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என ஏற்கெனவே CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், எவ்வளவு உயர்த்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், மார்ச்சில் வெளியாகும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இதுகுறித்த அறிவிப்பு இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
News February 3, 2026
82 வயதில் அடுத்த சாதனைக்கு தயாரான இளையராஜா

‘வேலியன்ட்’ சிம்பொனியை கடந்தாண்டு லண்டனில் அரங்கேற்றம் செய்து இளையராஜா உலக அளவில் கவனம் பெற்றார். இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள தனது புதிய ஸ்டூடியோவிற்கு வந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைவதாகவும், தனது 2-வது சிம்பொனியின் எழுத்துப் பணி ஏறக்குறைய முடிவடைந்துவிட்டதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். தற்போது அவருக்கு 82 வயதாகும் நிலையில், அடுத்த சாதனைக்கு இளையராஜா தயாராகி உள்ளார்.


