News January 3, 2026

விருதுநகர்: 4 அணைகளில் மீன் பாசி குத்தகை

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியாறு, கோவிலாறு, குன்னூர் சந்தை இருக்கன்குடி ஆகிய நான்கு அணைகளில் மீன் பாசி குத்தகை உரிமைக்கு ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. இவை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 10, 2026

விருதுநகர்: ராணுவ அதிகாரி வீட்டில் 14.5 பவுன் நகை திருட்டு.!

image

அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயபால், 41. இவர் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தன் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப் பட்டு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது 14.5 பவுன் நகை,வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 9, 2026

விருதுநகர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 9, 2026

விருதுநகர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விருதுநகர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!