News January 3, 2026
கோயிலில் மதவெறியை வளர்க்கக் கூடாது: சேகர்பாபு

கன்னியாகுமரி கோயில் நிகழ்ச்சியில் அமைச்சர் <<18742042>>சேகர்பாபு<<>> பக்தர்களை திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், அமைதி காக்கும் இடத்தில் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும், மதவெறியை வளர்க்கக் கூடாது என சேகர்பாபு தெரிவித்துள்ளார். பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை கோயிலுக்கு வெளியே சொல்லட்டும் எனவும், ஆன்மிகமும், பக்தியும் அறத்தைதான் உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 19, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு வரும் 21-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதேபோல், பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்கு பிப்.25 அன்று உள்ளூர் விடுமுறையாகும்.
News February 19, 2026
மீண்டும் SIR பணிகள்!

தேர்தலையொட்டி தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் விடுபட்டுள்ள ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR பணிகள் நடைபெறவுள்ளன. வரும் ஏப்ரல் மாதம் முதல் இப்பணிகள் தொடங்கும் என ECI அறிவித்துள்ளது.
News February 19, 2026
திருமணமான ஆண்களுக்கு மட்டும்…

திருமணமான ஆண்களுக்கு தொப்பை வளர்வது நார்மல் தான். ஆனால், அது உடல்நலனுக்கு கேடு என்கிறது போலந்து ஆய்வு. பேச்சிலர் ஆண்களைவிட, திருமணமான ஆண்களுக்கு உடல்பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு 3.2 மடங்கு உள்ளதாம். ஆனால், பெண்கள் குண்டாவதற்கும் திருமணத்துக்கும் பெரிய தொடர்பில்லையாம். அதனால் என்ன என்கிறீர்களா? உடல்பருமன் அதிகரித்தால் BP முதல் கிட்னி பிரச்சனை வரை எண்ணற்ற நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகும். ALERT!


