News January 2, 2026
நெல்லை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 13, 2026
நெல்லையில் ரயில் முன் பாய்ந்த பெண் – தற்கொலை?

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த முருகன் மனைவி மாடத்தி (40) என்பவர், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஜன.07ந் தேதி கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தார். விபத்தில் சிக்கினாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா எனச் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 13, 2026
நெல்லை: தூக்கி செல்லப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒரு மாற்றுத்திறனாளி நியமன மாமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று சக்கர வாகனத்தில் வரும் அவர் மேல் தளத்தில் உள்ள மாமன்ற கூட்டத்தை அரங்கிற்கு செல்வதற்கு சரியான வசதிகள் இல்லாத நிலையில் ரெண்டு பேர் உதவியுடனே மேலே செல்லும் அவலம் உள்ளது.
News January 13, 2026
நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பத்தர தீப திரு விழாவை முன்னிட்டு இன்று(ஜன.13) மாலை தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 06:00 மணிக்கு சுவாமி சன்னதி மணிமண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறும். இது அணையா விளக்காக 18ம் தேதி வரை காட்சிதரும். அன்றைய தினம் இரவு கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் தீபங்கள் ஏற்றும் வைபவம் நடைபெறும்.


