News January 2, 2026

திருப்பூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News February 8, 2026

திருப்பூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 8, 2026

பல்லடம் அருகே துணிகர சம்பவம்!

image

பல்லடம் சித்தம்பலம் பகுதியில் தனியார் கோழிப்பண்ணை ஊழியர் யூஜின் – ஆசிரியை ஜோதா தம்பதியினர் வேலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருடப்பட்டன. கண்காணிப்பு கேமராவை துணியால் மறைத்து மர்ம நபர்கள் இந்த துணிகரத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 8, 2026

திருப்பூரில் வசமாக சிக்கிய பெண்

image

திருப்பூர் தெற்கு போலீசார் பூ மார்க்கெட் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அங்கேரிபாளையம், அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த சர்மிளா(49) என்பதும் அவர் அந்த பகுதியில் கேரளா லாட்டரி விற்றதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 10 கேரளா லாட்டரியை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!