News January 2, 2026
FLASH: 2,700 பேர் மரணம்

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கு முன் யாராலும் தப்ப முடியாது. 2025-ல் இயற்கை சீற்றங்களால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரத்தை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓராண்டில் மட்டும் 2,760 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், புயல், கனமழை, வெப்ப அலை என அதிதீவிர வானிலை நிகழ்வுகளே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
வீல்சேரில் முடங்கிய பிரபல காமெடி நடிகர்!

தனது காமெடி டைமிங் & சிறப்பான நடிப்பால் மலையாள சினிமாவை கட்டியாண்ட ஜகதி ஸ்ரீகுமாரின் நிலை, நம்மை கலங்கச் செய்கிறது. 1500+ படங்களுக்கு மேல் நடித்துள்ளவரின் வாழ்க்கையை 2012-ல் நிகழ்ந்து கார் விபத்து புரட்டி போட்டு விட்டது. 5 தலைமுறைகளை கவர்ந்த அவர், இன்று பேசும் திறனை இழந்து, தற்போது வீல்சேரில் முடங்கியுள்ளார். மலையாளத்தில் உச்சம் தொட்டவர், தமிழில் ‘ஆடும் கூத்து’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
News January 15, 2026
பொங்கல் அன்று இதை செய்தால் அதிர்ஷ்டம் கொட்டும்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்னை சரியாக ஐதீகம் சில வழிமுறைகளை சொல்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள், கோயிலுக்கோ அல்லது ஏழைகளுக்கோ சுத்தமான நெய் மற்றும் வெல்லத்தை தானமாக வழங்கலாம். வெல்லம் சூரியனுடனும், நெய் சுபிட்சத்துடனும் தொடர்புடையது. இந்த தானம் உங்கள் செல்வத்தை மேம்படுத்தும் என்கின்றனர். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 15, 2026
TN-ஐயும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது: அமைச்சர்

பண்டைய தமிழகம் ஆன்மிக பூமியாக திகழ்ந்தது, ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், TN-ஐயும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது இரண்டும் பின்னிப்பிணைந்தவை என்றார். ஆனால், சமீபமாக சனாதனம் மீதான மாண்பு குறைந்து வருகிறது எனவும் அது குறித்து கேலியும் விமர்சனமும் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.


