News May 3, 2024

கள்ளச்சந்தையில் IPL டிக்கெட்: 13 பேர் கைது

image

கள்ளச்சந்தையில் IPL டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். CSK-PBKS இடையேயான IPL போட்டி நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை, கள்ளச்சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திருவல்லிக்கேணி பகுதியில் 13 பேரை கைது செய்து, 33 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 13, 2025

தேனி: பள்ளி பஸ் மோதி பைக்கில் சென்ற இருவர் பலி

image

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த ஞானவேல் (54) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மாடு வாங்குவதற்காக நேற்று (டிச.12) ஜெயமங்கலம் பகுதியில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த பள்ளி பேருந்து இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ஞானவேல், மணிகண்டன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News December 13, 2025

BREAKING: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்

image

பிக்பாஸில் இந்த வாரம் இரண்டு பேர் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. FJ, கம்ருதீன், ரம்யா ஜோ, சபரிநாதன், சாண்ட்ரா, கானா விநோத், வியானா உள்ளிட்டோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் குறைந்த வாக்குகளை பெற்றதால் ரம்யா ஜோ, சாண்ட்ரா எலிமினேட் ஆகியுள்ளனர். வீட்டில் விதிகளை மீறிய விஜே பார்வதி, கம்ருதீனையும் விஜய் சேதுபதி கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

News December 13, 2025

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகளா?

image

கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால், கடந்த முறையை விட சுமார் 30 தொகுதிகள் கூடுதலாக கேட்டு பாஜக, டிமாண்ட் வைத்ததாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில், 50 தொகுதிகள் தர முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் EPS, 30 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். டெல்லிக்கு விரைந்துள்ள நயினார், அமித்ஷாவிடம் இதுகுறித்து ஆலோசனை செய்யவிருக்கிறாராம்.

error: Content is protected !!