News January 2, 2026

சூலூர் அருகே பரபரப்பு! சாலையில் கிடந்த அம்மன் சிலை

image

சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் அயோத்தியாபுரம் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் அங்கே வைத்து வழிபட முடிவு செய்தனர். ஆனால் அங்கு வந்த வட்டாட்சியர் சிலையை பொதுமக்களிடமிருந்து எடுத்து சென்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்தனர். இது பற்றி சூலூர் போலீசார் விசாரணை செய்கின்றனர்

Similar News

News January 16, 2026

கோவை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

கோவையில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News January 16, 2026

தன்பாத்-கோவை வாராந்திர ரயில்கள் திடீர் ரத்து

image

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை கோவைக்கு இயக்கப்பட்டு வந்த தன்பாத்-கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த ரயில் சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

News January 16, 2026

கோவை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம் <<>>மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு(0422-2449550) அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!