News January 2, 2026
விழுப்புரம்: தந்தை கண்முன்னே மகன் பரிதாப பலி!

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த துளசிங்கம், நேற்று தனது மகன் நவீன்ஸ்ரீ-யை (11) மொபெட்டில் அமர வைத்துக் கொண்டு, நடுவனந்தலில் இருந்து – ஆகூா் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிா் திசையில் வந்த லாரி வழிவிடுவதற்காக துளசிங்கம் மொபெட் மீது மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Similar News
News January 10, 2026
விழுப்புரம்: மதுக்காக உயிரை விட்ட முதியவர்!

விழுப்புரம்: பாணாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ஏ.சேகா் (64). மதுப்பழக்கம் உடைய இவா் தினமும் வீட்டுக்கு மது அருந்தி வந்தாராம். இதை சேகரின் மனைவி பூங்காவனம், மகன் சபரிநாதன் ஆகியோா் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சேகா் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
News January 10, 2026
விழுப்புரம்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

விழுப்புரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
விழுப்புரத்தில் மழையால் மின்தடையா? உடனே CALL!

விழுப்புரம் மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!


