News January 2, 2026
வேலூர்: பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி!

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பானுமதி (55), ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் பாஸ்கரன் (65) என்பவரிடம், கீழ்யாச்சூர் பகுதியில் 1.41 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக, ஒரு கோடி ரூபாயை கடந்த மே மாதம் வழங்கியுள்ளார். ஆனால், பாஸ்கரன் நிலத்தை அவருக்கு விற்காமல், வேறு ஒருவருக்கு விற்று விட்டு, பானுமதியிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்த புகாரில் பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 24, 2026
குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா

குடியாத்தம் மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துக்களோடு, அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்து வைக்கின்றனர் என ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளனர்.
News January 24, 2026
குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா

குடியாத்தம் மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துக்களோடு, அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்து வைக்கின்றனர் என ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளனர்.
News January 24, 2026
வேலூர்: உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க (CLICK)

வேலூர் மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


