News January 2, 2026
தாராபுரம் அருகே சோகம்

தாராபுரம் அருகே உள்ள கவுண்டையன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன். இவரது மனைவி சுப்பம்மாள்(60). இவர் தனது உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு மீண்டும் உப்புத்துறைபாளையம் பகுதிக்கு வருகை புரிந்து பஸுக்காக காத்திருந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதமாக மோதியதில் பரிதாபமாக மூதாட்டி உயிரிழந்தார்.
Similar News
News January 13, 2026
பாதயாத்திரையில் சோகம்: திருப்பூர் பெண் பலி

திருப்பூரைச் சேர்ந்த சத்யா (57) என்பவர், பழனி முருகனை தரிசிக்கத் திருப்பூரில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டார். நேற்று பழனி – தாராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 13, 2026
திருப்பூரில் ட்ரோன் பறக்க தடை

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் ஜன.14, 15 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் கணக்கம்பாளையம் மற்றும் பிச்சம்பாளையம் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி அப்பகுதியில் ட்ரோன் பறக்க தடை விதித்து கலெக்டர் நாரணவரே மனீஷ் ஷங்கர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.
News January 13, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (ஜன.12) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


