News January 2, 2026

கடலூர்: தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

image

கடலுார் முதுநகர் அடுத்த குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ரத்னாம்பாள் (80). கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர், விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது, அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் படுகாயமடைந்தார். இதில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 14, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

கடலூர் மாவட்டத்தில் வருகிற ஜன.16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, 2 நாட்களுக்கு அனைத்து சில்லறை மதுபான கடைகளும், மனமகிழ் கூடங்களும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News January 14, 2026

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.13) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.13) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!