News January 2, 2026

ராமநாதபுரம்: ஒரே நாளில் 100 பேர் கைது

image

தொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அதில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், பேரூராட்சியின் தலைவர் மகன் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை தடுக்கக் கோரியும் தொண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு த.மு.மு.க., உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த ஏராாளமானோர் முற்றுகையிட்டனர். அனுமதி இல்லாமல் முற்றுகையிட்டதால் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது தொண்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.

Similar News

News January 26, 2026

ராமேஸ்வரம்: நடுக்கடலில் சூறாவளியால் மூழ்கிய படகு!

image

ராமேஸ்வரத்தில் இருந்து ஜன. 24 அன்று விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இலங்கை கடல் எல்லையில் அன்றிரவு திடீரென சூறாவளி வீசி, கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் கிருபாகரன் படகில் நீர் புகுந்து மூழ்கத் துவங்கியது. படகில் இருந்த கிருபாகரன், அந்தோனி, அசோக், செல்வம், தீன் உள்ளிட்ட 6 பேர் வயர்லெஸ் கருவி மூலம் உதவி கேட்டனர். விரைந்து மற்றொரு படகில் சென்ற மீனவர்கள் அவர்களை மீட்டனர்.

News January 25, 2026

ராமநாதபுரம்: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

ராமநாதபுரம் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 25, 2026

ராமநாத சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு

image

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் லட்சுமண தீர்த்தம் தெப்பத்தில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதனால் வருற பிப்ரவரி 1ஆம் தேதி அன்று தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் அன்று பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!