News January 2, 2026

திருவாரூர்: தர்கா உண்டியலை உடைத்து திருட முயற்சி!

image

முத்துப்பேட்டை தெற்கு தெரு அரபு சாஹீப் பள்ளிவாசல் தர்காவின் உண்டியலை யாரோ மர்ம நபர் உடைத்து திருட முயற்சி செய்து உண்டியலின் பூட்டை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தர்கா கமிட்டி தலைவர் தக்பீர் நெய்னா முகமது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தர்கா உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Similar News

News January 26, 2026

திருவாரூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

image

1. திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

News January 26, 2026

திருவாரூர்: பெண் எடுத்த விபரீத முடிவு

image

பேரளம் அடுத்த போழக்குடியைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி சசிகலா (42). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் விஷம் குடித்து விட்டார். அதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 26, 2026

திருவாரூர்: பெண் எடுத்த விபரீத முடிவு

image

பேரளம் அடுத்த போழக்குடியைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி சசிகலா (42). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் விஷம் குடித்து விட்டார். அதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!