News January 2, 2026
கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனர்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்த சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐ. ஜி. பதவிக்கு உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சென்னை பெருநகர (தெற்கு) சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராகப் பணியாற்றி வந்த கண்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கண்ணன் 2010-ல் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார் சென்னை சென்றார்
Similar News
News January 2, 2026
கோவை: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு <
News January 2, 2026
அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு இலவச முழு மாதிரித்தேர்வுகள் வரும் 3, 10 மற்றும் 17-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
News January 2, 2026
கோவை: குழந்தை, தாய் உயிரிழப்பு

கோவை அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கீதா. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருந்த போதும் மீண்டும் கர்ப்பமாகி GH-ல் சிகிச்சை பெற்று வந்தார். 6 மாதக் கருவில் இருந்த குழந்தை இறந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் உடல் நல மோசமடைந்து சங்கீதா உயிரிழந்தார். பின் சிகிச்சை அலட்சியம் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். பின் மருத்துவர்கள் உயர் ரத்த அழுத்தமே காரணம் என விளக்கம் அளித்தனர்.


