News January 2, 2026
கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனர்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்த சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐ. ஜி. பதவிக்கு உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சென்னை பெருநகர (தெற்கு) சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராகப் பணியாற்றி வந்த கண்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கண்ணன் 2010-ல் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார் சென்னை சென்றார்
Similar News
News January 2, 2026
கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கோவை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 2, 2026
கோவையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
News January 2, 2026
மேட்டுப்பாளையத்தில் திடீர் ரத்து

நீலகிரியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் – குன்னூர் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் மரங்கள், பாறை விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் இன்று ஒரு நாள் காலை 7:10 மணிக்கு புறப்படும் ரெகுலர் மலை ரயில் மற்றும் 9.10 மணியளவில் புறப்படும் சிறப்பு மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


