News January 2, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 13, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(ஜன.14) புகையில்லா போகி பண்டிகை கொண்டாட மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் பழைய டயர் டியூப்கள் ரசாயனம் கலந்த இழைகள் ஆகியவற்றை எரிப்பதை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்து மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாட பொது மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
News January 13, 2026
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் இயங்காது!

காஞ்சிபுரத்தில் வருகிற 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் , 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த தினங்களில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் மூடப்படுவதாக மாவட்ட கலெக்டர் கலைச் செல்வி மோகன் தெரிவித்துள்ளார். அத்துமீறி மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டம், நேற்று இரவு – இன்று (ஜன.13) காலை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர்!


