News January 2, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.01) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.02) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 10, 2026
நாகை: டாஸ்மாக் கடையை மூட ஆட்சியர் உத்தரவு

திருவள்ளுவர் தினமான ஜன.16 மற்றும் குடியரசு தினமான ஜன.26 ஆகிய இரண்டு நாட்கள் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளையும் மூட வேண்டும். இதே போல் அனுமதி பெற்ற அனைத்து பார்களும் மூடப்பட வேண்டும். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 10, 2026
நாகை மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள பொது அரங்குகள், மாநாட்டு அறைகள், சமுதாய கூடங்கள், மண்டபங்கள் போன்ற மூடிய வளாகங்களில் இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்றும், தவிர்க்க முடியாத காரணங்களுக்கு சார் ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்ற பின்னரே, ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 10, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இளைய தலைமுறையினரின் உடற்கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நாகை மாவட்டத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 16 – 35 வயதுடைய, நாகை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in வாயிலாக வரும் ஜன.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


