News May 2, 2024
முழுவதுமாக சாலை அமைக்க மக்கள் போராட்டம்

மன்னார்குடி 15 வது வார்டு கனகசபை பிள்ளை தெருவில் 200 மீ நீளம் தார் சாலை போடும் பணி இன்று தொடங்கியது. இந்நிலையில் 100 மீ மட்டுமே சாலை அமைக்கப்படும் என தகவல் வெளியானதால் தெருவாசிகள் சாலை அமைக்கும் இயந்திரங்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் 200 மீட்டர் தார் சாலை அமைக்கப்படும் என உறுதியாக தெரிவித்த பின் போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.
Similar News
News March 16, 2026
திருவாரூர்: தேர்வு கிடையாது – மத்திய அரசு பணி வாய்ப்பு

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 16, 2026
திருவாரூர்: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <
News March 16, 2026
திருவாரூர்: இன்று முதல் இருக்காது – ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள், இதர குறைதீர் கூட்டங்கள் யாவும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது என திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.


