News January 1, 2026
தூத்துக்குடி: கார் மோதி பரிதாப பலி!

கயத்தாறு அருகே அரசன் குளம் கிராமத்தில் நான்கு வழிச்சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரை ஓட்டிச் சென்ற இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக் (50) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
தூத்துக்குடி: டிராபிக் FINE – ஜ குறைக்க இதோ சூப்பர் வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <
News January 2, 2026
தூத்துக்குடி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 2, 2026
விளாத்திகுளம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

விளாத்திகுளம் க.சுப்பிரமணியபுரம் தெற்கு தெரு பகுதியைச்சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பிரசாத் (24), இவருக்கு வாகன விபத்தின் காரணமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரசாத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார், இதனால் வலி தாங்க முடியாமல் மனவேதனையில் இருந்த பிரசாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், விளாத்திகுளம் போலீசார் விசாரணை.


