News January 1, 2026
குமரி அருகே இளைஞர் அடித்துக் கொலை

கன்னியாகுமரி அருகே சுண்டன் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (34). இவர் செப்டிக் டேங்க் கிளீனிங் செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று இவர் வீட்டில் இருந்து வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. லீபுரம் கடற்கரையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது உடலை கன்னியாகுமரி போலீசார் கைப்பற்றி, அடித்து கொலை செய்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பரிதாப பலி

குமரி, தெங்கம்புதூர் தெற்கு அஞ்சு குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் (47) என்பவர் நாகர்கோவில் மாநகராட்சி 52-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் நேற்றிரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு மாடிக்கு தூங்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 6, 2026
குமரி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

குமரி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
குமரி: கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் பிரிட்ஜோ. இவரை பைக்கில் வந்த கஞ்சா போதை கும்பல் வீடு புகுந்து கத்தியால் குத்தியுள்ளது. மேலும், அந்த கும்பல் பொதுமக்களை அரிவாள் காட்டி மிரட்டியும் உள்ளது. இதுகுறித்த புகாரில் அஸ்வின் என்ற வாலிபர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் விசாரணையில் இவர் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.


