News January 1, 2026

திண்டுக்கல்லில் புல்லட் திருடன் கைது

image

திண்டுக்கல் டெலிபோன் காலனியில் வெங்கடேஷ் என்பவரது புல்லட்டை வீட்டிற்கு வெளியே இரவு நேரத்தில் நிறுத்தி இருந்த நிலையில் காணாமல் போனது. இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், திண்டுக்கல் நாகல்நகர், மென்டோசா காலனியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து புல்லட்டை பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 30, 2026

நத்தம் வாலிபரின் உயிரை பறித்த விபத்து

image

நத்தம் முளையூரைச் சேர்ந்த சன்னாசி என்பவரது மகன் சங்கர்(23). இவர் தனது நண்பர் கணபதியுடன் நேற்று பைக்கில் சென்றுகொண்டிருந்தார். சாணார்பட்டி அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த கணபதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!