News January 1, 2026

தேனி: சட்டக் கல்லுாரி மாணவர் மீது தாக்குதல்

image

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கபிலன் (20). இவர் தேனி அரசு சட்டக்கல்லூரியில் 3.ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவருடன் படிக்கும் வசந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வசந்தகுமார் அவரது நண்பர்கள் விக்னேஷ்வரன், சரண், செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து கபிலனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு (டிச.31) பதிவு.

Similar News

News January 11, 2026

தேனி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

News January 11, 2026

தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04546-262112 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News January 11, 2026

தேனி: மது போதையால் நடந்த விபரீதம்..

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (52). இவருக்கும், இவரது மகனுக்கும் நேற்று முன் தினம் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கர்ணன் அவரது மகனை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த செயல் குறித்து மனவேதனை அடைந்த கர்ணன் நேற்று (ஜன.10) அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!