News January 1, 2026

கள்ளக்குறிச்சி: கர்ப்பமடைந்த காதலி – மிரட்டிய காதலன்!

image

பவுஞ்சிப்பட்டைச் சேர்ந்த அய்யனாரும் (29), 26 வயது இளம்பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு, திருமணம் செய்ய மறுத்து அய்யானாா் வெளிநாடு சென்றுவிட்டார். பின்னா் வீடு திரும்பிய அய்யனாா், அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் அய்யனார், அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News January 3, 2026

கள்ளக்குறிச்சி: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

image

கள்ளக்குறிச்சி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

கள்ளக்குறிச்சி: குடிகார கணவன் மனைவியிடம் அட்டூழியம்!

image

கள்ளக்குறிச்சி: ஆதனூரைச் சேர்ந்த சுமிலாவும், சரவணப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டனும், கணவன் மனைவி. ஆனால், 5 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு சுமிலா உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அங்கு சென்ற மணிகண்டன், சுமிலாவை அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 3, 2026

கள்ளக்குறிச்சி: கொண்டாட வந்தவர் துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா், கொழுந்திராம்பட்டைச் சோ்ந்தவா் சி.பவுல்ராஜ் (31). இவா் சென்னையில் எலெக்ட்ரிஷியன் தொழில் செய்துவந்தாா். புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த அவர், நேற்று முன்தினம் பைக்கில் சொறையம்பட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!