News January 1, 2026

தூத்துக்குடி: இளம்பெண் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை?

image

கீழவைப்பார் கிராமத்தைச்சேர்ந்த மெரின் என்பவரின் மனைவி இன்ஃபன்ட் தீபிகா (34). இன்ஃபன்ட் தீபிகாவிற்கு சில வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதனால் மனவிரக்தியில் இருந்து வந்த இன்பன்ட் தீபிகா தனது கணவர் மெரினுக்கு தனது குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து குளத்தூர் போலீசார் விசாரணை.

Similar News

News February 18, 2026

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் முழுவதும் இன்று மூடல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியம், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 123 டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினமே மதுபான கடைகளில் கூட்டம் குவிந்தது.

News February 18, 2026

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் :

image

இன்று 18.02.26 மாவட்ட ஆட்சித்தலைவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கொள்வார். அன்றைய இரவு
அவ்வட்டத்திலேயே மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து அலுவலர்களும் தங்கி மறுநாளான 19.02.2026 அன்று அதிகாலை அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், தூய்மை போக்குவரத்து மற்றும் மாண்புமிகு முதல்வர் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.

News February 18, 2026

தூத்துக்குடி: வெளிநாடு வேலை CLICK

image

தூத்துக்குடி மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளை பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும். *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!