News December 31, 2025
நாகை-அரசுக்கு கிடைத்த ரூ.56 லட்சம்

நாகை மாவட்டத்தில் 2025ம் ஆண்டில் மதுவிலக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என 508 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டது. அதன் மூலம் அரசுக்கு ரூ.56.82 லட்சம் கிடைத்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
நாகை: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம்<
News January 1, 2026
நாகை: ரயில் நேரம் மாற்றம்

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடியில் மின்சார எஞ்சின், டீசல் எஞ்சின் ஆக மாற்றம் செய்யப்படுவதால், இரவு 11:05க்கு புறப்பட்ட ரயிலானது இனி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11:50க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி முதல் காரைக்குடி வரை உள்ள ரயில் பாதையானது மின் மயமாக்கப்பட்டதும் ரயில் வழக்கம்போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
நாகை: 508 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கஞ்சா போதைப் பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, 78 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 508 கிலோ கஞ்சா (மதிப்பு ரூ.50,85,600/-) மற்றும் 08 நான்கு சக்கர வாகனங்கள், 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


