News December 31, 2025
BREAKING: பொங்கல் பரிசை அறிவித்தது தமிழக அரசு

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ₹248 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதில் ரொக்கப்பணம் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
Similar News
News January 13, 2026
ராமதாஸுக்கு முட்டுக்கட்டை போடும் அன்புமணி

திமுக (அ) தவெக பக்கம் ராமதாஸ் கூட்டணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், NDA கூட்டணி அவரிடம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்பட்டது. ஆனால், இதில் அன்புமணியால் இழுபறி இருந்து வருகிறதாம். ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால் தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என அனைத்திலும் குழப்பம் வரும் என கூறி, அவர் முட்டுக்கட்டை போடுவதாக விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.
News January 13, 2026
பொங்கல் பரிசு.. சோகச் செய்தி வந்தது

பொங்கல் பரிசுத் தொகையை அனைவரும் சந்தோஷமாக வாங்கிவரும் போது, ஒரு குடும்பத்திற்கு மட்டும் அது சோகத்தில் முடிந்துள்ளது. கோவை நாகராஜபுரம் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி வீரம்மாள்(87) சாலையில் மயங்கியுள்ளார். இவரை ஹாஸ்பிடலில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்படியான சூழலை தவிர்க்க முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ₹3000 வழங்கலாமே எனக் கோரிக்கை வலுத்துள்ளது.
News January 13, 2026
அப்போ தோனி.. இப்போ கோலி!

NZ-க்கு எதிரான முதல் ODI-யின் போது, ரோஹித் அவுட்டாகி பெவிலியன் திரும்பும் போது, ரசிகர்கள் கோலியின் என்ட்ரிக்கு ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், ஒரு வீரர் அவுட்டாகி வெளியேறும் போது, ரசிகர்கள் தனக்கு உற்சாக வரவேற்பளிப்பது சரியல்ல என கோலி தெரிவித்துள்ளார். இதே போன்று தான் தோனிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்தனர் என குறிப்பிட்ட அவர், அவுட்டாகி வெளியேறும் வீரரின் மனநிலையை உணர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


