News December 31, 2025
செய்தி தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்திய விஜய்

தவெகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளார். அதன்படி பொறுப்பாளராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய செய்தித் தொடர்பாளர்களாக பெலிக்ஸ் ஜெரால்டு, வழக்கறிஞர் சத்தியகுமார், தேன்மொழி பிரசன்னா ஆகியோர் உள்ளனர். மேலும் மாநில செய்தித் தொடர்பாளர்களாக முகில் வீரப்பன், அமலன், ஆனந்தஜித் உள்ளிட்டோரை விஜய் நியமித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
தவெகவின் தேர்தல் ஆஃபர்: திருமாவளவன்

தேர்தலுக்காக தவெக எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு தருவதாக தவெக ஆஃபர் அளிப்பதாக கூறிய அவர், தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல, தேர்தலுக்கு ஆஃபர் கொடுக்கும் கட்சியாக தவெக உள்ளது என விமர்சித்துள்ளார். தனித்தே ஆட்சியை பிடிக்க முடியும் என நம்பும் அவர், தேர்தலுக்கு ஆஃபர் போட்டு காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 8, 2026
ஜனநாயகன் ரிலீஸாகாததால் ₹50 கோடி நஷ்டமா?

சென்சார் விவகாரத்தால் ‘ஜனநாயகன்’ தள்ளிப்போனது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் வணிக ரீதியாக ₹50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிக்கெட் விற்பனை, முதல் நாள் வசூல் ₹30 – ₹32 கோடி வசூலை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு, டிக்கெட் தொகை ரீஃபண்டிங் உள்ளிட்ட காரணங்களால் இந்த நஷ்டம் உண்டானதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News January 8, 2026
நெஸ்லே பால் பவுடரில் நச்சுப்பொருள்: விளக்கம்

இந்தியாவில் விற்கப்படும் தனது பால் பவுடரில் நச்சு இல்லை. அவை பாதுகாப்பானவையே என நெஸ்ட்லே தெரிவித்துள்ளது. வாந்தி ஏற்படுத்தும் நச்சு பொருளான Cereulide கலந்திருக்கலாம் எனக்கூறி உலகின் பல நாடுகளில் தனது தயாரிப்பிலான பால் பவுடர்களை நெஸ்ட்லே திரும்ப பெற்றது. எனினும், இந்தியாவில் விற்கப்படும் அனைத்தும் உள்ளூரில் தயார் செய்வதால், அவற்றில் நச்சுப்பொருள் எதுவும் இல்லை என நெஸ்ட்லே உறுதி அளித்துள்ளது.


