News December 31, 2025
ராம்நாடு: குடிநீர் பிரச்சனை தீர ஓரே வழி இதுதான்.!

ராம்நாடு மக்களே உங்க பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை, கலங்கலாக வருகிறது, குப்பை குவியல் போன்ற அடிப்படை பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா? ராமநாதபுரம் மாவட்ட இலவச கட்டுப்பாட்டு எண்ணிற்கு (1800 425 7040) புகார் தெரிவிக்கலாம். உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இந்த பயனுள்ள தகவலை உங்க பகுதி மக்களுக்கு உடனே SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News January 28, 2026
ராமநாதபுரம் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

ராமநாதபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் தங்குமிடம் மோசமாக இருந்ததை கண்ட நீதிபதிகள் மெஹபூப் அலிகான் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்தனர். நம் உறவினர்களை இங்கு தங்க வைப்போமா? இவர்களும் மனிதர்கள்தானே எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அடுத்த 10 நாட்களுக்குள் பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவலருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
News January 28, 2026
ராமநாதபுரம் மக்கள் கடும் அவதி…!

வங்கி ஊழியர்களின் ராமநாதபுரத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 27 வங்கிகளில் மொத்தம் 51 பெண்கள் உள்பட 150 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கின. குடியரசு தின விடுமுறையை தொடர்ந்து இந்த போராட்டம் நடந்ததால், 4 நாட்கள் வங்கிகள் செயல்படவில்லை. இதனால் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதுடன், 90% ஏ.டி.எம்-கள் பணமின்றி முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
News January 28, 2026
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (ஜன.27) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


