News December 31, 2025
கரூர் அருகே பெண் அதிரடி கைது!

கந்தம்பாளையத்தை சேர்ந்த விசாலாட்சிக்கும், கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நடையனூர் அருகே கார்த்திக்கின் சகோதரி அமுதாவும் (50), அவரது மகன் ஜெகனும் வீட்டில் இருந்தபோது விசாலாட்சி மற்றும் ஆண் ஒருவர் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாலாட்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 10, 2026
கரூர்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 10, 2026
கலை நிகழ்ச்சியில் கலக்கிய குளித்தலை மாணவர்கள்!

கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறையைச் சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கிருஷ்ணவேணி, ரம்யா, கீர்த்தனா, ரங்கராஜ், யுவராஜா ஆகியோர் திருச்சி தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக மாநில அளவில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி போட்டிகளில் மவுன நாடகப் பிரிவில் மூன்றாம் பரிசை பெற்றனர். அவர்களுக்கு பேராசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
News January 10, 2026
கரூரில் பெண் உட்பட 4 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் மாயனூர், சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, குளித்தலை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற முருகன் (54), அம்மையப்பன் (29), மலர்கொடி (41), சண்முகம் (50) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 91 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


