News December 31, 2025
மதுரை: குடிநீர் பிரச்சனை தீர ஓரே வழி இதுதான்.!

மதுரை மக்களே உங்க பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா? மதுரை மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போனில் (0452-2580764) தெரிவிக்கலாம். உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இந்த பயனுள்ள தகவலை உங்க பகுதி மக்களுக்கு உடனே SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News January 7, 2026
மதுரை: காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு..

பேரையூர் அருகே கொலவீரன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி கற்பகவல்லி (64). இவரை காணவில்லை என கல்லுப்பட்டி போலீசில் இரு தினங்களுக்கு முன்பு இவரது மகன் முத்து புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வில்லூர் கண்மாய் எதிரே உள்ள இந்திராணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் கற்பகவல்லி பிணமாக நேற்று முன்தினம் ( ஜன.5 ) மிதந்துள்ளார். உடலை மீட்டு பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 7, 2026
மதுரை: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கியாஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. காலாவதியான கியஸ் சிலிண்டர் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News January 7, 2026
மதுரை: வீட்டில் தனியாக இருந்த பெண் தற்கொலை

மதுரை அருகே ஆர்.வி.பட்டியை சேர்ந்தவர் செந்தில் என்பவரது மனைவி கலையரசி (37). செந்தில் திருவிழா கடைகளில் பேன்சி பொருள்கள் விற்பனை செய்து வருகிறார். கலையரசி
மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


