News December 31, 2025
நாகர்கோவில் – தாம்பரம் ரயில் 45நி முன்னதாக சென்றடையும்

நாளை முதல் பல்வேறு ரயில்களின் வேகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் வழக்கம் போல் பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு 45 நிமிடங்கள் முன்னதாக காலை 5.05 மணிக்கு சென்னை சென்றடையும். இதே போல் தாம்பரம் – நாகர்கோவில் ரயில் ஐந்து நிமிடம் முன்னதாக நாகர்கோவில் வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 5, 2026
குமரி: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

குமரி மாவட்ட மக்களே, பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள 514 ஆபிசர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகின. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.5க்குள் (இன்று) <
News January 5, 2026
குமரியில் 2,300 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 11 அரசு கல்லூரிகள் 17 அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் என்று மொத்தம் 28 கல்லூரிகளைச் சேர்ந்த 2,300 மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இன்று மாலை நாகர்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் 672 பேருக்கு இலவச லேப்டாப் களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமை வகிக்கிறார்.
News January 5, 2026
குமரி: டாஸ்மாக் விற்பனை ரூ.11 கோடியே 63 லட்சமாம்!

குமரி மாவட்டத்தில் 97 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் மது விற்பனை அதிகரித்தது. டிசம்பர் 31.ம் தேதி ரூ.4,32,94,260, ஜனவரி 1.ம் தேதி ரூ4,08,2640, ஜனவரி3.ம் தேதி ரூ.3,22,16,650 என மொத்தம் ரூ11 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரத்து 550க்கு மதுபானங்கள் குமரியில் விற்பனையாகி உள்ளது. பீர் வகைகளை விட மதுபான வகைகளே அதிகம் விற்பனையானது எனவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


