News December 31, 2025
திருக்கழுகுன்றத்தில் நாளை திருப்படி உற்சவ விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டின் தொடக்க நாளான நாளை காலை 9 மணிக்கு திருப்பதி உற்சவ விழா மேளதாளங்களுடன் ஓதுவார் குழுக்களுடன் திருமுறைகள் பாடப்பட்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Similar News
News January 13, 2026
செங்கல்பட்டு: பொங்கல் பணம் ரூ.3,000 வரலையா?

உங்களுக்கு இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரலையா? பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என தெரிவித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது பற்றி நீங்கள் மெசேஜ் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர்!
News January 13, 2026
செங்கல்பட்டு: பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

செங்கை மக்களே, பொங்கல் விடுமுறையின் போது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செங்கையில் உள்ளவர்களுக்கோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 9790550052எண்ணில் புகார் செய்யலாம். ஷேர்!
News January 13, 2026
செங்கை: புழுதி பறந்த கார் – பீதியில் மக்கள்!

மறைமலை நகர் நகராட்சி 8-வது வார்டில், நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானம், காலை & மாலை நேரங்களில் அதிக அளவில் கூட்டம் நிறைந்து காணப்படும். இதில் நேற்று மாலை இரண்டு கார்களில் வந்த, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அதிக வேகமாக கார்களை இயக்கி மைதானத்தில் புழுதி பறக்க சாகசத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று வாகனங்களை ஓட்டுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.


