News December 31, 2025
ஏ டி எஸ் பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ( டிசம்பர்31) வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 2, 2026
வேலூரில் இரைகொல்லி பறவைகள் கணக்கெடுப்பு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 இடங்களில் இரைகொல்லி பறவைகள் குறித்த சிறப்பு கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆந்தை, கழுகு, கரும்பருந்து உள்ளிட்ட ஐந்து வகைகளைச் சேர்ந்த மொத்தம் 92 இரைகொல்லி பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
News February 2, 2026
வேலூர்: வாலிபர் துடிதுடித்து பலி!

காட்பாடி கல்புதூரை சேர்ந்தவர் கார்த்தி (31). இவர் சித்தூரில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் கார்த்தி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த கார்த்தி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 2, 2026
வேலூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

வேலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <


