News December 31, 2025

திருவாரூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

Similar News

News January 12, 2026

திருவாரூர்: பணம் வைத்து சூதாட்டம்-2பேர் கைது

image

முத்துப்பேட்டை போலீசார் தில்லைவிளாகம் கீழக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வாசன் என்பவரின் மீன் குளம் அருகே பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்த கீழக்கரை வாசன் (45), இடையார்காடு வீரசேகரன் (47) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கீழக்கரை ராதாகிருஷ்ணன் மற்றும் செல்லப்பா ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

News January 12, 2026

திருவாரூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

திருவாரூர்: மதுவில் விஷம் கலந்து குடித்தவர் மரணம்

image

திருவாரூர், ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சரவணன் (42). இவர் திருமணம் ஆகாத விரக்தியில் கடந்த மாதம் 26-ம் தேதி விஷத்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!