News December 31, 2025
தூத்துக்குடி: அரசு அதிகாரி மர்ம மரணம்

ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த கண்ணன் (55) குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு சொர்ணம் என்ற மனைவியும், பாலகிருத்திக் என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தனது தந்தையை பார்க்க பாலகிருத்திக் நேற்று வந்துள்ளார். அப்போது வீட்டில் கண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 21, 2026
தூத்துக்குடி: B.E போதும்- அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 21, 2026
தூத்துக்குடி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 21, 2026
தூத்துக்குடி: ஆற்றில் மூழ்கி அக்காள் – தங்கை பலி

தேனியைச் சேர்ந்த சந்திரகுமார்(45) தனது குரும்பத்தினர், உறவினர்கள் என 20 பேருடன் வேனில் ஏரால் சேர்மன் அருணாச்சலசாமி கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்களில் சிலர் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற போது அதில் 4 சிறுமிகள் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதில் சந்திரக்குமாரிம் மகள்களான அபிநயா(16), மீனாட்சி(12) ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


