News December 31, 2025
தேனி: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தம்பதி..!

கூடலுார், லோயர்கேம்பை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கணேஸ்வரி. இருவரும் தங்களது பேத்தியுடன் நேற்று மதியம் மாடுகளுக்கு புல் அறுக்க முல்லைப் பெரியாற்று பகுதிக்கு சென்றனர். அப்போது ஆற்றை கடக்க முயன்ற போது மூவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அதே பகுதியில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞா் சிறுமியை மட்டும் மீட்டுள்ளார். மேலும், தம்பதியர் இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Similar News
News January 15, 2026
தேனி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 15, 2026
போடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

போடிநாயக்கனூர் எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன். இவரது மனைவி பிரேமா. ஜெகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில், ஜன.12 அனறு மனைவியைத் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த்துள்ளார். இதுகுறித்து பிரேமா அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீசார் ஜெகனை நேற்று கைது செய்தனா்.
News January 15, 2026
தேனி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க


