News December 31, 2025
வேலூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பால் பரபரப்பு!

வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே முத்து மண்டபம் டோபிகானா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 4 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதாக இன்று (டிசம்பர் 31) பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பத்திரமாக பிடித்து சென்றனர். குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Similar News
News January 15, 2026
வேலூர்: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.
News January 15, 2026
வேலூர்: லிங்க்கை கிளிக் செய்த நபர்.. ரூ.60.லட்சம் அபேஸ்!

வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் மர்மமான இணைய லிங்க் ஒன்று வந்துள்ளது. அதை க்ளிக் செய்த அவர், அதில் வந்த ஆசை வார்த்தைகளை நம்பி ரூ.60.88 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். பின் அந்த பெண் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சிசெய்தபோது சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதன் பின்னரே அந்த பெண் வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
News January 15, 2026
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <


