News December 31, 2025
நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
Similar News
News January 7, 2026
நாகை: போதைப் பொருள் பதுக்கியவர் கைது

நாகை மாவட்டம், வாய்மேடு காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நாகரத்தினம் மற்றும் போலீசார் நேற்று மருதூர் மாடிக் கடை என்ற இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது ராமதாஸ் (25) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் 45 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றி ராமதாஸை கைது செய்தனர்.
News January 7, 2026
நாகை: கடத்தல் காரர்கள் அதிரடி கைது

நாகை எஸ்.பி.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் நேற்று இரவு மாணிக்கப்பங்கு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் ரூ.50,000 மதிப்புள்ள 700 புதுவை மாநில சாராய பாட்டில்களை கடத்தி வந்த பாண்டியன், கிருபாநிதி ஆகிய இருவரையும் போலீசார் செய்தனர். இதையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் 3 டூவிலர்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய ஒரு வாலிபரை தேடி வருகின்றனர்.
News January 7, 2026
நாகை: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் ஜன.10-ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 18 முதல் 35 வயதுடைய, 8-வது முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம் நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


