News December 31, 2025
தி.மலை: கிரிவலம் செல்வோர் கவனத்திற்கு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (02.01.2026) மாலை 6.45 மணிக்கு பௌர்ணமி தொடங்குகிறது. சனிக்கிழமை (03.01.2026) மாலை 4.43 மணிக்கு பௌர்ணமி நிறைவடைகிறது. இந்நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News January 10, 2026
தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News January 10, 2026
தி.மலை: Gpay, Phone pay பயனாளர்கள் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 10, 2026
திமலை: குறைந்த விலையில் வாகனம் வாங்க சூப்பர் வழி!

திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 130 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதில் 122 இருசக்கர வாகனங்கள், ஒரு முச்சக்கர வாகனம் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும். வரும் 12-ம் தேதி காலை 9 மணி முதல் எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் இந்த ஏலம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.


