News December 31, 2025
புதுகை: விபரீதத்தில் முடிந்த கணவன் மனைவி பிரச்னை!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அடுத்த பாலன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (45). இவர் நேற்று மது போதையில் அவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, பாலன் நகரில் உள்ள அவரது வீட்டின் மேற்கூறையில் உள்ள மர உத்திரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 21, 2026
புதுக்கோட்டை: 110 கிலோ கஞ்சா பறிமுதல்!

மணமேல்குடி பகுதியில் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தோணியார் புரத்தில் உள்ள நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்றதை கண்டறிந்தனர். இதனை அடுத்து கஞ்சாவை கடத்த முயன்ற ஆரோக்கிய ராகுல் (35), சிவசங்கர் (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News January 20, 2026
புதுக்கோட்டை: மின் பிரச்சனையா? இதோ தீர்வு

புதுக்கோட்டை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!’
News January 20, 2026
புதுகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

புதுகை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


