News December 31, 2025
புதுகை: விபரீதத்தில் முடிந்த கணவன் மனைவி பிரச்னை!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அடுத்த பாலன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (45). இவர் நேற்று மது போதையில் அவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, பாலன் நகரில் உள்ள அவரது வீட்டின் மேற்கூறையில் உள்ள மர உத்திரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
புதுக்கோட்டை: பைக் மோதியதில் ஒருவர் பலி

விராலிமலை அடுத்த கொடும்பளூர் பாலம் அருகே, நேற்று சந்திரன்(51) என்பவர், நேற்று காரில் கொடும்பலூர் சென்றுள்ளார். அப்போது, காரை சாலையோரம் நிறுத்திவிட்டு SOC-யில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியே பைக்கை ஒட்டி வந்த வெங்கடாசலபதி(32), சந்திரன் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பலியானார். இதுக்குறித்து சந்திரன் மனைவி அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 2, 2026
புதுக்கோட்டை: பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசால் ஆண்டுதோறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமில்லாமலோ அல்லது சரியாக வந்து சேரவில்லை என்றால் ‘1800 425 5901’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு அலைச்சல் இல்லாமல் உங்களால் புகார் அளிக்க முடியும். மேலும் இந்த எண்ணின் மூலமாக ரேஷன் கடை மற்றும் ரேஷன் பொருட்கள் குறித்தும் நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
புதுக்கோட்டை: மூதாட்டியை தாக்கி நகை பறித்த மர்ம நபர்

அறந்தாங்கி அருகே அலஞ்சிரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவமாலை(69). இவர் தனது வீட்டில் உள்ள மாட்டில் பால் கறக்க சென்ற போது, அங்கு பதிங்கிருந்த் மர்ம நபர் ஒருவர் அவரை தாக்கி 3 சவரன் தங்க சங்கிலையை பறித்து சென்றுள்ளார். பின்னர் மூதாட்டையை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாராணை மேற்கொண்ட் காவல்துறை, பெரியாளூரை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.


