News December 31, 2025
தருமபுரி: தேங்காய் பறிக்க சென்றவர் பரிதாப பலி!

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர் சிவராஜ் (65). மரம் ஏறும் தொழிலாளியான இவர், கோழிமேக்கனூர் பிரதீப் என்பவரின் தோட்டத்திற்கு தேங்காய் பறிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
தருமபுரி:தை முதல் அன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

தருமபுரி மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில் *தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில்,
*அதியமான் கோட்டை காலபைரவர் கோவில்,
*குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்,
கொட்டாய் பெருமாள் கோவில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
தருமபுரி மக்களே லஞ்சம் கேட்டால் உடனே CALL!

தருமபுரி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04342-260042) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 14, 2026
தருமபுரி: நிரந்தர பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


