News December 31, 2025
திருவாரூர்: மகள் கண்முன்னே தந்தை பலி

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள மாணிக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் சந்தோஷ் ராஜன் (52). இவரும், இவரது மகள் லென்சி பிளசி(22) இருவரும் நேற்று முன்தினம் டூ-வீலரில், தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாமந்தான் காவிரி பாலம் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் சந்தோஷ்ராஜன், அவரது மகளின் கண்முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் படுகாயம் அடைந்தார்.
Similar News
News January 17, 2026
திருவாரூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News January 17, 2026
திருவாரூர் மாவட்டத்தில் தாழ்வாகப் பறந்த விமானம்

நன்னிலம் அருகே சொரக்குடி, மூங்கில்குடி, விசலூர், காக்கா கோட்டூர் பகுதிகளில் நேற்று காலை ஒரு விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்தது. மேலும் மிகவும் தாழ்வாக தென்னை மரங்களை தொட்டுச் செல்லும் அளவிற்கு பறந்ததால் பலத்த சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனை அடுத்து, தாழ்வாகப் பறந்தது பயிற்சி விமானம் என்பது தெரிய வந்தது.
News January 17, 2026
திருவாரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


