News December 31, 2025

சிவகங்கையில் போலீஸ் மீது தாக்குதல்!

image

சிவகங்கை தாலுகா சார்பு ஆய்வாளர் சக்திவேல், காவலர் சூர்யகுமார் உள்ளிட்ட போலீசார் நாட்டரசன்கோட்டையில் குற்றப்பதிவேடு குற்றவாளியான ஆலடியார் தெருவை சேர்ந்த ஈஸ்வரனை கண்காணிக்க சென்றனர். அப்போது ஈஸ்வரன் எஸ்.ஐ., மற்றும் உடன் இருந்த போலீசாரை அசிங்கமாக பேசி கையில் வைத்திருந்த கட்டையால் தாக்கினார். போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News February 8, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (07.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News February 8, 2026

சிவகங்கை: 2.5% வட்டியில் தனிநபர் கடன்

image

சிவகங்கை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <>லிங்கில்<<>> சென்று அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை SHARE IT

News February 8, 2026

சிவகங்கை: கோழிக்காக சகோதரருக்கு அரிவாள் வெட்டு

image

தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் சகோதரர்கள். இந்நிலையில், கருப்புசாமியின் கோழி பாலமுருகனின் வீட்டுக்குள் சென்றதாகவும் இதனால் ஏற்பட்ட தகராறில் பாலமுருகன், கருப்புசாமியை அரிவாளால் தாக்கி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருப்புசாமி கொடுத்த புகாரின் பெயரில் பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!