News December 31, 2025
கரூர்: மகன் கண்முன்னே தந்தை மரணம்!

கரூர் மாவட்டம் புகலூர், முத்தனூரை சேர்ந்தவர் தினேஷ்பாபு (39). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் மகன் சந்தீப்ரோஷன் உடன் வேலாயுதம்பாளையம் காவரி பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி இருவரும் காயமடைந்தனர். சந்தீப்ரோஷன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தினேஷ்பாபு கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கை பதிவு செய்தனர்.
Similar News
News January 16, 2026
களத்தில் அதிரடி: கரூர் கலெக்டர் கொடுத்த அப்டேட்

குளித்தலை ராச்சாண்டார்திருமலையில் நாளை (ஜனவரி 17) ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் சுமார் 700 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மாடுபிடி வீரர்கள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பனியன்கள் வழங்கப்படும். காளைகளுக்கும், வீரர்களுக்கும் சுவாச பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் karur.nic.in இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
புகழூர்: பொங்கல் விளையாட்டு போட்டியில் எம்எல்ஏ

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வார்டு எண் 16-க்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர், மாவட்ட தொ.மு.ச தலைவர் V.R.அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், நகர அவைத் தலைவர் வாங்கிலி, ஆகியோர் இருந்தனர்.
News January 16, 2026
புகழூர்: பொங்கல் விளையாட்டு போட்டியில் எம்எல்ஏ

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வார்டு எண் 16-க்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர், மாவட்ட தொ.மு.ச தலைவர் V.R.அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், நகர அவைத் தலைவர் வாங்கிலி, ஆகியோர் இருந்தனர்.


