News December 30, 2025
பாரூர் பெரிய ஏரியில் மீன்பாசி குத்தகை – ஆன்லைன் ஏலம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் பெரிய ஏரியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கான இணையவழி ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 5, 2026 காலை 9:00 மணிக்குள் www.tntenders.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம்.
Similar News
News January 16, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜன.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இரவு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி மற்றும் புகார்களுக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 04343-236010-ஐ அழைக்கலாம். குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News January 15, 2026
கிருஷ்ணகிரி: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குறீங்களா..

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.
News January 15, 2026
கிருஷ்ணகிரி: 10th போதும்.. மத்திய அரசு வேலை ரெடி

1. RBI-ல் Office Attendant பிரிவில் 572 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.47,029 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.04. சூப்பர் வாய்ப்பு. மிஸ் பண்ண வேண்டாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.


