News December 30, 2025
கடலூர்: ஊட்டச்சத்து உணவுகளை பரிமாறிய ஆட்சியர்

“இரத்த சோகையில்லா கடலூர்” திட்டத்தில் கடலூர், அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊட்டச்சத்து உணவுகளை இன்று (30.12.2025) பரிமாறினார். அப்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பொற்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News January 14, 2026
கடலூர்: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

கடலூர் மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
கடலூர்: 2,000 போலீசார் பாதுகாப்பு!

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு எஸ்.பி ஜெயக்குமார் மேற்பார்வையில், கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், ரகுபதி தலைமையில், 9 துணைக் கண்காணிப்பாளர்கள், 39 ஆய்வாளர்கள், 231 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்.பி. அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
கடலூர்: தவெக நிர்வாகிக்கு கத்திவெட்டு

கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பை சேர்ந்தவர் வெற்றிவேல் (41). தமிழக வெற்றிக் கழகத்தின் பகுதி செயலாளரான இவர் நேற்று இரவு கரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பேர், அவரிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த வெற்றிவேல் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இது குறித்து துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


