News May 2, 2024
சிவகங்கை: அரிசி கடத்தல் குறித்து புகார் அளிக்கலாம்

தமிழக அரசு பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் அதிக லாபத்தில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் குறித்து 1800 599 5950 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகாரளிக்கலாம் என சிவகங்கை உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 19, 2026
சிவகங்கை: நேர்காணலில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள்

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News March 18, 2026
சிவகங்கை : ரூ. 20 லட்சம் தேவையா.. அசத்தல் திட்டம்

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ₹20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ₹50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.
News March 18, 2026
சிவகங்கை: இந்த 12 ஆவணங்களை கொண்டும் வாக்களிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள <


