News May 2, 2024
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளர் தினமான நேற்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “முன் அனுமதி பெறாமல் தொழிலாளர்களை பணிக்கு வரவழைத்த 80 கடைகள், நிறுவனங்கள், 78 உணவு கடைகள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 162 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
கோவையில் 5 வயது சிறுவன் உறுப்புதானம்: 4 பேருக்கு வாழ்வு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் சிவாதித்யா, சாலை விபத்தில் சிக்கி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச்சாவு அடைந்தார். பின் அவரது பெற்றோர் உறுப்புதானம் செய்ய முன்வந்தனர். அதன்படி சிறுவனின் இதயம், கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டன. இந்த உறுப்புகள் கோவை, சேலம், சென்னை நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டு 4 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளன.
News March 13, 2026
கோவையில் எழுந்த சர்ச்சை

கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 44 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திமுக ஆதரவாளரான கோவை வைஷ்ணவி தனது எக்ஸ் தள பக்கத்தில்” “ஊசி மட்டும்தான் பயமா இருக்கு அக்கா, மத்தபடி நாங்க ஜாலியாதாங்ககா இருக்கோம்” என மாணவர்கள் கூறியதாக பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
News March 13, 2026
கோவை: 8வது போதும்.. அரசு வேலை! NO EXAM

கோவை மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


